tamilnadu

img

பேருந்தில் போகச் சொன்னார் பிரதமர் மோடி ரயில் விடச் சொன்னவர் பினராயி

திரூர், மே 3- சொந்த ஊருக்கு செல்ல ரயிலில் ஏறியவர்கள் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு நன்றி சொல்லி கையசைத்தபடி, ‘பேருந்தில் போகச் சொன்னார் பிரத மர், ரயில் விடச் சொன்னவர் பினராயி; பகுத் அச்சா ஆத்மி’ என மலையாளத்திலும் இந்தியிலுமாக கூறினார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் மெகத்தோ. 

“கேரள முதல்வர் பினராயி விஜயன் மிகவும் நல்லவர், எங்களை உறவினராக கருதி ஊருக்கு செல்ல வழிவகுத்தார். இந்த மகிழ்ச்சியை வார்த்தை களால் சொல்ல முடியவில்லை” - திரூர் ரயில் நிலை யத்திலிருந்து மனைவி சோனியா தேவி, மகன்களான சுமித் குமார், அஜித் குமார், அபிஜித் குமார் ஆகியோரு டன் தன்பூர் செல்லும் ரயிலில் புறப்படத் தயாராக இருந்த மனோஜ் கூறினார். 

இருபது ஆண்டுகளுக்கு முன்பு தரை ஓடுகள் பதிக்கும் பணிக்காக கேரளம் வந்தவர் மனோஜ். கடந்த சில ஆண்டுகளாக மலப்புறம் மாவட்டம் தானூரைச் சேர்ந்த கிருஷ்ணன் குட்டி என்கிற ஒப்பந்ததாரரிடம் வேலை செய்து வருகிறார். தானூரில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்த இவர் பாட்னா சாபடுவில் உள்ள பெற்றோரை சந்திக்க விரும்பினார். பேருந்தில் போகு மாறு பிரதமர் சொன்னதும் கவலையாக இருந்தது. அப்போதுதான் கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளிமாநில தொழிலாளர்களுக்காக சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். திரும்பி வந்ததும் அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும் என்றார்.